தலையில்லா பெருச்சாளி ஒன்றை
தின்றுகொண்டிருக்கும் குட்டி எலிகள்.
காகக் குரலில் கரையும் வெயில்
அறைக்கதவிற்கு வெளியே நிற்கும்
பெயரறியா மரத்திற்குப்
பல்லியென்று பெயர் வைத்தேன்
வயதாகிக்கொண்டிருக்கும்
பல்லியின் உச்சியில்
தளிர்க்கிறது செவ்விலை
உள்ளிருட்டு
புறவெயில்
காய்ந்த இலையின் கீழ்
உயிர் கரைத்து
வனைகிறது
சிலந்தியொன்று.
Brinthan
பிறப்பின் அடையாளமாய் பருவங்கள் இணைந்தன. வெயிலும் மழையும் பனியும் அக்கோலைச்சுற்றிச் சுழன்றன. ஒவ்வொரு பருவத்தின் நிறமும் மற்றையதோடு கலந்து வெண்ணிறமாய் மாறின. தேவதைகள் என் தலையின் மேல் சுழன்று பச்சிலைகளைக் கோர்த்தனர். மெலிதான மாதுளையின் மணம் காற்றில் கலந்தது. கோலின் மீது செதில்களாக இறக்கைகள் முளைக்கத்தொடங்கின. தேவதையர் தாம் கோர்த்த பச்சிலைகளை என்னுடலாக்கினர். தூரத்திலிருந்து புல்லாங்குழலின் இசை புகைச் சுருள்களாக மிதக்கதொடங்கியது. தேவதையர் என்னை “மீக்காயீல்” என்றழைத்தனர். நான் அழிந்து மீக்காயீல் ஆனேன். “மீக்காயீல்” எனப்படும் நான் பிறந்தேன்.
Related Posts
- 4 months ago
- 8 months ago
- 9 months ago
- 10 months ago
Facebook Comments